சந்தேகத்திற்கு இடமாக நடந்த கொண்ட நபரின் காரை, பெட்டாலிங் ஜெயாவில் இருந்து, சைபர் ஜெயா வரை துரத்திச்சென்று பிடிக்கப்பட்ட நபர், ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவங்களில் போலீசாரால் தீவிரமாக தேடப்பட்டு வந்த நபர் ஆவார் என்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முஹமாட் ஃபக்ருசின் அப்துல் ஹமிட் தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்டன 50 கிலோ மீட்டர் தூரம் வரையில் போலீசாரின் ஒன்பது எம்பிவி கார்களினால் துரத்திச் சென்று ஒரு பெண்ணுடன் பிடிப்பட்ட அந்த நபர் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் கூறினார்.








