லுமூட், டிச. 26-
மேற்கு கரையோர நெடுஞ்சாலையில் லுமூட்டிற்கு அருகில் இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் தாயும், மகனும் மரணமுற்றனர்.
இச்சம்பவம், இன்று வியாழக்கிழமை அதிகாலை 5.00 மணியளவில் பந்திங்கையும், தைப்பிங்கையும் இணைக்கும் அந்த புதிய நெடுஞ்சாலையான டபிள்யூ.சி.இ.யில் நிகழ்ந்தது.
காலை 5.15 மணியளவில் தகவல் கிடைத்து ஆயர் தாவார் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த ஏழு வீர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அதன் பேரா மாநில உதவி இயக்குநர் சபாரோட்ஷி நோர் அகமட் தெரிவித்தார்.
புரோட்டோன் வீரா மற்றும் பெரோடுவா கெலிசா ரக கார்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் 24 வயது மாதுவான நோர் படில்லா முகமட் அஸ்லான் மற்றும் அவரின் இரண்டு வயது மகன் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது.
இந்த விபத்தில் மூன்று ஆடவர்கள், ஒரு பெண் மற்றும் இரண்டு சிறார்கள் சம்பந்தப்பட்டு இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.








