கோலா திரங்கானு, பிப்ரவரி.23-
தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தித் தனது குழந்தைகளுக்கு வேலை வாங்கித் தந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட திரங்கானு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவர், நாளை செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குத் தொடர அரசு வழக்கறிஞரிடம் அனுமதி பெற்றுள்ளது. நாளை காலை 9 மணியளவில் கோலா திரங்கானு செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர் மீது அதிகாரப்பூர்வமாகக் குற்றஞ்சாட்டப்படும்.
60 வயது மதிக்கத்தக்க அந்த நபர், நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.15 மணியளவில் கெமாமான் எஸ்பிஆர்எம் அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்கச் சென்ற போது கைது செய்யப்பட்டார்.








