Dec 2, 2025
Thisaigal NewsYouTube
ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் நில அமிழ்வு காரணமாக மூடப்பட்ட சாலை மீண்டும் திறக்கப்பட்டது!
தற்போதைய செய்திகள்

ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் நில அமிழ்வு காரணமாக மூடப்பட்ட சாலை மீண்டும் திறக்கப்பட்டது!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.11-

கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜிட் இந்தியா பகுதியில், நேற்று ஏற்பட்ட நில அமிழ்வு காரணமாக சாலையில் தோன்றிய குழி பழுது பார்க்கப்பட்டு, அச்சாலை மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை முதல் மாலை 6.30 மணி வரையில், அச்சாலையில் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்றதாக கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அப்பகுதியில், சாலைக் கட்டமைப்பின் நிலைத்தன்மையில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக இந்த நில அமிழ்வு ஏற்பட்டிருக்கலாம் என்றும் டிபிகேஎல் குறிப்பிட்டுள்ளது.

அதே வேளையில், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எப்போதுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ள டிபிகேஎல், பழுது பார்க்கும் பணியின் போது பொதுமக்கள் வழங்கிய ஒத்துழைப்பிற்கு நன்றியும் தெரிவித்துள்ளது.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்