Mar 17, 2026
Thisaigal NewsYouTube
ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் நில அமிழ்வு காரணமாக மூடப்பட்ட சாலை மீண்டும் திறக்கப்பட்டது!
தற்போதைய செய்திகள்

ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் நில அமிழ்வு காரணமாக மூடப்பட்ட சாலை மீண்டும் திறக்கப்பட்டது!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.11-

கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜிட் இந்தியா பகுதியில், நேற்று ஏற்பட்ட நில அமிழ்வு காரணமாக சாலையில் தோன்றிய குழி பழுது பார்க்கப்பட்டு, அச்சாலை மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை முதல் மாலை 6.30 மணி வரையில், அச்சாலையில் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்றதாக கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அப்பகுதியில், சாலைக் கட்டமைப்பின் நிலைத்தன்மையில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக இந்த நில அமிழ்வு ஏற்பட்டிருக்கலாம் என்றும் டிபிகேஎல் குறிப்பிட்டுள்ளது.

அதே வேளையில், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எப்போதுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ள டிபிகேஎல், பழுது பார்க்கும் பணியின் போது பொதுமக்கள் வழங்கிய ஒத்துழைப்பிற்கு நன்றியும் தெரிவித்துள்ளது.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு