Apr 1, 2026
Thisaigal NewsYouTube
வழக்கு ஷா ஆலம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

வழக்கு ஷா ஆலம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது

Share:

டிச. 23-

GISB ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, அவரது மனைவி மேலும் 20 பேரமாகிய அனைவரும் திட்டமிட்ட குற்றக் குழுவில் உறுப்பினர்களாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கு ஷா ஆலம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. செலாயாங் செஷன்ஸ் நீதிமன்றம் ந்நிதிபதி Lailatul Zuraida Harron இந்த முடிவை அரசு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிறகு எடுத்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் Al-Arqam நிறுவனரின் மகனும் அடங்குவார். குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினர் சிறையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை சாதாரண சிறைக்கு மாற்ற விண்ணப்பம் செய்ய உள்ளதாகவும் அவர்களின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த வழக்கு பொதுமக்களிடையே அதிகம் பேசப்படுவதால், வழக்கை முறையாக நடத்த நீதிமன்ற உத்தரவு பெறவும் குற்றஞ்சாட்டப்பட்டவர் தரப்பு திட்டமிட்டுள்ளது. இந்த வழக்கில் பல்வேறு வழக்கறிஞர்கள் இரு தரப்பிலும் ஆஜராகினர்.

கடந்த அக்டோபர் மாதம், ரவாங்கில் உள்ள திட்டமிட்ட குற்றக் குழுவின் உறுப்பினர்களாக செயல்பட்டதாக நசிருதீன் மற்றும் பலர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்களுக்கு குற்றவியல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்