கோலாலம்பூர் ஜன.22
வரும் ஜனவரி 25 ஆம் தேதி தைப்பூச விழாவை முன்னிட்டு சிலாங்கூர் பத்துமலைத் திருத்தலத்திற்கும், பினாங்கு தண்ணீர் மலை கோவிலுக்கும் பக்தர்கள் சென்று வருவதற்கு பிரதான பொது போக்குவரத்து நிறுவனமான Rapit Bus Sdn. Bhd இலவச பேருந்து சேவையை வழங்குவதாக அறிவித்துள்ளது.
பத்துமலை, ஸ்ரீ சுப்பிரமணியம் சுவாமி கோவிலுக்கும், பினாங்கில் கெபூன் பூங்ஙா, ஸ்ரீ பால தண்டாயுதபாணி கோவிலுக்கும் இந்த .இலவச பேருந்து சேவை வழங்கப்படுகிறது.
அதேவேளையில் இவ்விரு ஆலயங்களுக்கும் பேருந்து சேவை வரும் ஜனவரி 24 ஆம் தேதி புதன்கிழமை காலை 5 மணி முதல் ஜனவரி 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை 15 நிமிடத்திற்கு ஒரு பேருந்து சேவை வழங்கப்படும். இதில் தைப்பூசத்தன்று மட்டுமே இலவச சேவையாகும் என்று Rapit Bus Sdn. Bhd நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள ஓர்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.








