May 21, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் தண்ணீர் கட்டணம் உயர்த்தப்படும்
தற்போதைய செய்திகள்

பினாங்கில் தண்ணீர் கட்டணம் உயர்த்தப்படும்

Share:

பினாங்கு மாநிலத்தில் விரைவில் அறிவிக்கப்படவிருக்கும் வீட்டிற்கான தண்ணீர் கட்டண உயர்வு தொடர்பில் அதற்கான விண்ணப்பத்தை புத்ராஜெயாவிடம் மாநில அரசாங்கம் சமர்ப்பிக்கவிருப்பதாக மாநில முதலமைச்சர் சௌ கோன் இயோவ் தெரிவித்தார்.

பினாங்கு மாநிலத்தில் வீட்டு பயனீட்டுக்கான தண்ணீர் கட்டண உயர்வு நீண்ட காலமாக மேற்கொள்ளப்படாமல் இருப்பதை மாநில மு தலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஆகக்கடையிகா கடந்த 2015 ஆம் ஆண்டு வீட்டுப்பயனீட்டுக்கான தண்ணீர் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன் பின்னர கடந்த எட்டு காலமாக எவ்வித கட்டண உயர்வையும் மாநில அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்று பினாங்கு குடிநீர் விநியோக வாரியத்தின் தலைவருமான சௌ கோன் இயோவ் தெரிவித்தார்.

பினாங்கு மாநிலத்திற்கு விநியோகிக்கப்படும் நீருக்கு மிகப்பெரியளவில் அரசு உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆயிரம் லிட்டர் நீரையும் சுத்திகரிப்பு செய்வதற்கு பினாங்கு குடிநீர் விநியோக வாரியம் தலா ஒரு வெள்ளிக்கும் அ திகமான தொகையை செலவிடுகிறது. ஆனால், அந்த நீரை தலா 30 காசுக்கு மட்டுமே விற்பனை செய்கிறது என்று சௌ கோன் இயோவ் தெளிவுபடுத்தினார்.

Related News

டீசல் விலை உயர்வு: கட்டுமானச் செலவு 15% வரை அதிகரிப்பு என பி.கே.பி.எம் தகவல்

டீசல் விலை உயர்வு: கட்டுமானச் செலவு 15% வரை அதிகரிப்பு என பி.கே.பி.எம் தகவல்

சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: காப்பகப் பொறுப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படிகள்

சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: காப்பகப் பொறுப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படிகள்

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள் கைது

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

மாமன்னரை அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட் மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்