மக்களின் நகரப்புற வறுமையை கையாளுவதிலும் அதற்கு தீர்வு காண்பதிலும் தமது முக்கிய கவனமாக இருக்கும் என்று பிரதமர் துறையின் கூட்டரசு பிரதேசத்திற்கான அமைச்சர் டாக்டர். சலிஹா முஸ்டஃபா உறுதி தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை சீரமைப்பில் சுகாதார அமைச்சர் பொறுப்பிலிருந்து கூட்டரசு பிரதேச அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் டாக்டர். சலிஹா, இன்று தமது புதிய பணியை ஏற்று, கூட்டரசு பிரதேச இலாகா அதிகாரிகளின் பணித் தன்மை குறித்து செய்தியாளர்களிடம் விவரிக்கையில் மேற்கொண்டவாறு கூறினார்.
நகரப்புற வறுமையை துடைத் தொழிக்க விரும்பும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் நோக்கம் மற்றும் தொலை நோக்குப் பார்வையை தாம் நிறைவேற்ற உறுதி பூண்டு இருப்பதாக டாக்டர். சலிஹா குறிப்பிட்டார்.








