கோலாலம்பூர், எல்ஆர்டி மாலூரி ரயில் நிலையத்தில் பெண் பயணியை மானபங்கம் செய்ய முயற்சித்தாக நம்பப்படும் ஆடவரை போலீசார் தேடி வருகின்றனர். போலீசாரின் ஒத்துழைப்புடன் ரேப்பிட் ரயில் நிறுவனம் அந்த ஆடவரை தேடி வருகிறது. நேற்று வெள்ளிக்கிழமை காலை 7.58 மணியளவில் அந்த ரயில் நிலையத்தின் 1 ஆவது பிளாட்பாரத்திலிருந்து 2 ஆவது பாரத்திற்கு அத்துமீறி நுழைந்த ஓர் ஆடவர் பிளட்பாரத்தில் எல்ஆர்டி ரயிலுக்கு காத்திருந்த பெண்ணியிடம் மானப்பங்கம் செய்ய முயற்சித்துள்ளார். இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. எனினும் இதர பயணிகள், அந்தப் பெண்ணை சம்பந்தப்பட்ட காமூகனிடமிருந்து காப்பாற்றியுள்ளனர். இச்சம்பவத்திற்குப் பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இச்செயலுக்காக ரேப்பிட் ரயில் நிறுவனம் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ள வேளையில் மனோரீதியாக பாதிக்கப்பட்ட அந்ந நபரை தேடும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக 4 பண மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: குற்றத்தை மறுத்த இருவரும் விசாரணை கோரினர்

Grok மீதான கட்டுப்பாடுகளை அதிகரித்தது X நிறுவனம் - ஃபாமி ஃபாட்சீல் தகவல்

தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கில் இலவச படகு சவாரி

ஆயுதப்படைகளில் சீர்த்திருத்தங்களும், துடைத்தொழிப்பு நடவடிக்கையும் அவசியம் – அன்வார் வலியுறுத்து

வெளிநாட்டு தொழில்நுட்பத்தை சார்ந்திருப்பதை DIPN குறைக்கிறது: காலிட் நோர்டின்


