பல்லின மக்களைக் கொண்டு நாட்டின் தேர்தலில் வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைத்திருக்கும் கட்சியாக பிகேஆட் திகழ்கின்ற நிலையில், அக்கட்சி அடுத்தப் பொதுத் தேர்தலில் வெற்றி பெறாது எனக் கூறப்படும் கருத்தை முற்றிலுமாக மருத்திருக்கிறார் பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி.
1999 இல் பிகேஆர் முதன்முதலில் நிறுவப்பட்டபோது எதிர்கொண்ட சிரமங்களையும் சவால்களையும் சுட்டிக் காட்டிய ரஃபிஸி ரம்லி, கட்சியில் சேர பலதரப்பட்டவர்களால் நிராகடிக்கப்பட்டதை நினைவுகூர்ந்தார்.
பல இனக் கட்சிகளுக்கு நம் நாட்டில் நம்பிக்கையும் ஆதரவும் இல்லை என அப்போதைய ஆய்வாளர்கள் கூறினர். கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறை சென்றபோது, அக்கட்சியினர் அன்வாருக்காக மட்டும் போராடுகிறார் எனக் குற்றஞ்சாட்டினர்.
தேர்தலில் தோற்று விடுவோம். அன்வார் பிரதமர் ஆக மாட்டார் எனப் பலவாறு கருத்துகள் நிலவியது. ஆனால், இப்போது அந்த நிலை மாறி, ம ஆட்சியையே அமைக்க முடிந்திருக்கிறது.
எனவே, அரசியக் ஆய்வாளர்கள், கபவனிப்பாளர்களின் ன்கருத்துகளுகும் அவர்களின் அனுமானங்களுக்கும் அதிக அளவு கவனத்தைக் கொடுக்காமல் மக்கள் நலன் பணியிலும் கட்சியின் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்துங்கள் என பிகேஆர்-இன் உறுப்பினர்களை ரஃபிஸி கேட்டுக் கொண்டார்.








