Mar 22, 2026
Thisaigal NewsYouTube
லைசென்ஸின்றி பேருந்தைச் செலுத்தி இலங்கை பிரஜை கைது
தற்போதைய செய்திகள்

லைசென்ஸின்றி பேருந்தைச் செலுத்தி இலங்கை பிரஜை கைது

Share:

ஷா ஆலாம், செப்டம்பர்.06-

பயணிகளை ஏற்றிச் செல்லும் பிஎஸ்வி லைசென்ஸின்றி இலங்கை பிரஜை ஒருவர் பேருந்தைச் செலுத்தியதை சாலை போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே கண்டுபிடித்துள்ளது.

பேருந்தின் சாலை வரி சிட்டை காலாவதியான நிலையில் காப்புறுதியின்றி பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்தை 30 வயது மதிக்க இலங்கை பிரஜை செலுத்தியது ஜேபிஜே அதிகாரிகளை அதிரச் செய்துள்ளது.

நேற்று கோலாலம்பூர் – கிள்ளான் கூட்டரசு நெடுஞ்சாலையில் ஷா ஆலாமிற்கு அருகில் அந்தப் பேருந்துடன் அந்த இலங்கை பிரஜை பிடிபட்டதாக சிலாங்கூர் மாநில ஜேபிஜே இயக்குநர் அஸ்ரின் பொர்ஹான் தெரிவித்தார்.

தனது முதலாளியின் உத்தரவின் பேரில் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்தைக் கடந்த 6 மாத காலமாகச் செலுத்தி வருவதாக அந்த இலங்கை பிரஜை காரணம் கூறியிருப்பதாக அஸ்ரின் பொர்ஹான் குறிப்பிட்டார்.

போக்குவரத்து நிறுவனம் ஒன்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட அந்த பேருந்து பறிமுதல் செய்யப்பட்ட வேளையில் அந்த இலங்கை பிரஜையும் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி