மோட்டார் சைக்கிளில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த ஆடவர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று மாலை 6.30 மணியளவில் பந்திங், புக்கீட் சிடிக் தேயிலைத் தோட்டத்தையொட்டிய பகுதியில் நிகழ்ந்தது.
50 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர் சாலையோரத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானதாக கோலலங்காட் மாவட்ட போலீஸ் தலைவரக அமாட் ரிட்வான் பின் முகமட் சலே தெரிவித்தார்.
பந்திங், பண்டார் மக்கோத்தாவில் உள்ள ஒரு தொழிற்சாலைப் பணியாளரான அந்த நபர், கடும் மழைக்கு மத்தியில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியதாக கூறப்படுகிறது. தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவ உதவிக்குழுவினர் அந்த ஆடவரை பரிசோதனை செய்ததில் அவர் இறந்து விட்டதாக உறுதி செய்தனர் என்று அமாட் ரிட்வான் குறிப்பிட்டார்.

Related News

அந்த இந்தியப் பிரஜையின் முன்னாள் முதலாளியை ஆள்பல இலாகா விசாரணை நடத்தும்

மளிகைக்கடையில் கொள்ளையிட்டதாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது


