Jan 19, 2026
Thisaigal NewsYouTube
மின்னல் தாக்கி ஆடவர் பலி
தற்போதைய செய்திகள்

மின்னல் தாக்கி ஆடவர் பலி

Share:

மோட்டார் சைக்கிளில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த ஆடவர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று மாலை 6.30 மணியளவில் பந்திங், புக்கீட் சிடிக் தேயிலைத் தோட்டத்தையொட்டிய பகுதியில் நிகழ்ந்தது.

50 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர் சாலையோரத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானதாக கோலலங்காட் மாவட்ட போலீஸ் தலைவரக அமாட் ரிட்வான் பின் முகமட் சலே தெரிவித்தார்.

பந்திங், பண்டார் மக்கோத்தாவில் உள்ள ஒரு தொழிற்சாலைப் பணியாளரான அந்த நபர், கடும் மழைக்கு மத்தியில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியதாக கூறப்படுகிறது. தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவ உதவிக்குழுவினர் அந்த ஆடவரை பரிசோதனை செய்ததில் அவர் இறந்து விட்டதாக உறுதி செய்தனர் என்று அமாட் ரிட்வான் குறிப்பிட்டார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட்  மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்