Jan 19, 2026
Thisaigal NewsYouTube
எட்டு நாள் கால அவகாசம் வழங்க இணக்கம்
தற்போதைய செய்திகள்

எட்டு நாள் கால அவகாசம் வழங்க இணக்கம்

Share:

உலு சிலாங்கூர், பாதாங் காளி, செரென்டா, கம்போங் தம்பாஹான் மக்களின் வீடுகள் உடைக்கப்படுவதிலிருந்து 8 நாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேம்பாட்டளர் நிறுவனத்துடன் மூடா கட்சியின் சிலாங்கூர் மாநிலத் துணைத் தலைவரும் உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி தலைவருமான டாக்டர் ரா. சிவபிரகாஷ் நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக வீடு உடைக்கப்படும் நடவடிக்கையைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க மேம்பாட்டாளர் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

அதேவேளையில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்ட வீடுகளுக்கு நேற்று மாலை 4 மணியளவில் மீண்டும் மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சம்பந்தப்பட்ட மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர். தவிர, நேற்று முன்தினம் உடைக்கப்பட்ட 6 வீடுகள் மக்கள் குடியிருக்காத காலி வீடுகளாகும் என்பதையும் டாக்டர் சிவபிரகாஷ் தெளிவுபடுத்தினார்.

பாதிக்கப்பட்ட அந்த 12 குடும்பங்களின் நலன்களும் பாதுகாக்கப்படுவதை எல்லா நிலைகளிலும் உறுதி செய்யப்படும். தவிர அவர்களுக்கு மூடா கட்சி ஆதரவாக இருக்கும் என்பதுடன் தேவையான உதவிகளை நல்கி வரும் என்று டாக்டர் சிவபிரகாஷ் உறுதிகூறினார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட்  மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்