May 20, 2026
Thisaigal NewsYouTube
எட்டு நாள் கால அவகாசம் வழங்க இணக்கம்
தற்போதைய செய்திகள்

எட்டு நாள் கால அவகாசம் வழங்க இணக்கம்

Share:

உலு சிலாங்கூர், பாதாங் காளி, செரென்டா, கம்போங் தம்பாஹான் மக்களின் வீடுகள் உடைக்கப்படுவதிலிருந்து 8 நாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேம்பாட்டளர் நிறுவனத்துடன் மூடா கட்சியின் சிலாங்கூர் மாநிலத் துணைத் தலைவரும் உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி தலைவருமான டாக்டர் ரா. சிவபிரகாஷ் நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக வீடு உடைக்கப்படும் நடவடிக்கையைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க மேம்பாட்டாளர் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

அதேவேளையில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்ட வீடுகளுக்கு நேற்று மாலை 4 மணியளவில் மீண்டும் மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சம்பந்தப்பட்ட மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர். தவிர, நேற்று முன்தினம் உடைக்கப்பட்ட 6 வீடுகள் மக்கள் குடியிருக்காத காலி வீடுகளாகும் என்பதையும் டாக்டர் சிவபிரகாஷ் தெளிவுபடுத்தினார்.

பாதிக்கப்பட்ட அந்த 12 குடும்பங்களின் நலன்களும் பாதுகாக்கப்படுவதை எல்லா நிலைகளிலும் உறுதி செய்யப்படும். தவிர அவர்களுக்கு மூடா கட்சி ஆதரவாக இருக்கும் என்பதுடன் தேவையான உதவிகளை நல்கி வரும் என்று டாக்டர் சிவபிரகாஷ் உறுதிகூறினார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு