Apr 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

4 மீனவர்களிடமிருந்து 6 துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்

Share:

பிறை, ஜன.28-

பினாங்கு, பிறை கடற்பகுதியில் இரண்டு இந்தோனேசியர்கள் உட்பட நான்கு மீனவர்களை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் கைது செய்யப்பட்டது மூலம் இரு படகுகளிலிருந்து 6 துப்பாக்கிகள், 801 துப்பாக்கித் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அகமட் தெரிவித்தார்.

உளவுத்துறை தகவலைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் 3.10 மணியளவில் பிறை கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சென்று கொண்டிருந்த இரண்டு Fiber மீன் பிடிபடகுகளை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அவ்விரு படகுகளையும் போலீசார் சோதனையிட்ட போது , ஐந்து துப்பாக்கிகளும், M4 ரகத்திலான ஒரு துப்பாக்கியும், தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக ஹம்ஸா அகமட் குறிப்பிட்டார்.

இவ்விரு மீன் பிடிபடகுகளுக்கும் பதிவு எண்கள் இல்லை. அவை பினாங்கு துறைமுகத்திலிருந்து பினாங்கு பாலத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது தடுத்து நிறுத்தப்பட்டதாக ஹம்ஸா அகமட் தெரிவித்தார்.

Related News

எதிர் திசையில் காரைச் செலுத்திய பெண் கைது

எதிர் திசையில் காரைச் செலுத்திய பெண் கைது

மலேசியாவின் தொலைநோக்குத் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: எம்.சி.ஏ இறுதி அஞ்சலி

மலேசியாவின் தொலைநோக்குத் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: எம்.சி.ஏ இறுதி அஞ்சலி

எரிபொருள் விலை உயர்வு: விமானக் கட்டணங்களை உயர்த்துகிறது ஏர்ஏசியா எக்ஸ்

எரிபொருள் விலை உயர்வு: விமானக் கட்டணங்களை உயர்த்துகிறது ஏர்ஏசியா எக்ஸ்

7 சக வீரர்களைத் தாக்கிய இராணுவக் கோப்ரல் மீது நீதிமன்றத்தில் வழக்கு: ஒருவர் கவலைக்கிடமான நிலையில் அனுமதி

7 சக வீரர்களைத் தாக்கிய இராணுவக் கோப்ரல் மீது நீதிமன்றத்தில் வழக்கு: ஒருவர் கவலைக்கிடமான நிலையில் அனுமதி

மாணவர்கள் உயிரிழந்த சோகம்: அனைத்து IPG-களிலும் சாகச மற்றும் நீர் விளையாட்டு நடவடிக்கைகளுக்குக் கல்வி அமைச்சு அதிரடித் தடை

மாணவர்கள் உயிரிழந்த சோகம்: அனைத்து IPG-களிலும் சாகச மற்றும் நீர் விளையாட்டு நடவடிக்கைகளுக்குக் கல்வி அமைச்சு அதிரடித் தடை

தண்டனை குறைப்பு தேதியை மாற்றக் கோரி 26 கைதிகள் மேல்முறையீடு - கூட்டரசு நீதிமன்றம் ஒத்திவைப்பு

தண்டனை குறைப்பு தேதியை மாற்றக் கோரி 26 கைதிகள் மேல்முறையீடு - கூட்டரசு நீதிமன்றம் ஒத்திவைப்பு