மத்திய அரசாங்கத்தின் தேசிய தினத்திற்கு முரணாக சொந்த சின்னத்தை பயன்படுத்தி மக்களிடையே பிளவுகளையும், பேதங்களையும் ஏற்படுத்த வேண்டாம் என்று தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் கேட்டுக்கொண்டார்.
இது போன்ற நடவடிக்கைககள் தேவையின்றி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அதேவேளையில், மக்களிடையே பிளவுகளையும், பேதங்களையும் ஏற்படுத்தி, மனதில் வெறுப்புணர்ச்சியை விதைக்க வகை செய்யும் என்று அவர் எச்சரித்தார்.
தேசியத் தினத்தின் மைய கருப்பொருளை பணயம் வைத்து , இதில் யார் பலசாலி என்பதை நிரூபிப்பதற்கு இது ஆடுகளம் அல்ல. அறிவு சார்ந்த தளம். அவரவர் தத்தம் அரசியல் சித்தாந்தஙகளையும், கருத்து வேறுபாடுகளையும் சற்று ஒதுக்கி வைத்து விட்டு, நமது முன்னோர்கள் பெற்றுத் தந்த சுதந்திரக் காற்றுக்கு மரியாதையும், விசுவாசத்தையும் செலுத்த ஒரே கருப்பொருள், ஒரே சின்னம், ஒரே எண்ணம் என்ற நிலையில் ஒன்றுப்பட்டு இருப்போம், ஒருமைப்பாட்டை காப்போம் என்று ஆரோன் அகோ டகாங் வலியுறுத்தினார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


