May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சொக்சோவை ஏமாற்றிய வர்த்தகர் மீது குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூர், ஜன.21-

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்படாத பயிற்சிக்காக, சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவிடம் 8 லட்சத்து 32 ஆயிரம் வெள்ளியை கோரி, மோசடிப் புரிந்ததாக வர்த்தகர் ஒருவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

பி. சத்தியசீலன் என்ற 52 வயதுடைய அந்த நபருக்கு எதிராக மொத்தம் 17 மோசடிக் குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.

கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதிக்கும் 2021 ஆம் ஆண்டு ஜுன் 12 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் மூன்று பயிற்சித்திட்டங்கள் நடத்தப்படாத நிலையில் அதில் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டதைப் போல போலியான ஆவணங்களைத் தயாரித்து., இரண்டு சொக்சோ அதிகாரிகளை நம்பவைத்து ஏமாற்றியதாக சத்தியசீலன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சத்தியசீலனின் நிறுவனமான Global Education Network Sdn. Bhd. நிறுவனத்திற்கு எட்டு லட்சத்து 32 ஆயிரம் ரிங்கிட்டை பெறும் அளவிற்கு மிகப்பெரிய மோசடியில் அந்நபர் ஈடுபட்டதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்