பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து பிராசிகியூஷன் செய்து கொண்ட மேல்முறையீட்டில் அவர் ஏன் விடுதலை செய்யப்பட்டு இருக்கக்கூடாது என்பதற்கு 13 காரணங்களை முன்வைத்துள்ளது.
முகைதீன் நாட்டின் பிரதமராக இருந்த போது தனது தலைமையிலான பெர்சத்து கட்சியின் வங்கிக்கணக்கிற்கு ஜன விபாவா நிதியிலிருந்து 23 கோடியே 25 லட்சம் வெள்ளி நிதியை மடை மாற்றம் செய்ததில் தமது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்று அவருக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
எனினும் முகைதீனுக்கு எதிரான நான்கு குற்றச்சாட்டுகளில் அடிப்படை முகாந்திரங்கள் இல்லை என்று கூறி அவரை விடுதலை செய்து இருப்பது மூலம் விசாரணை நீதிபதி ஜமீல் ஹுசின் தவறு இழைத்துள்ளார் என்று பிராசிகியூன் தரப்பு தனது மேல்முறையீட்டில் தெரிவித்துள்ளது.

Related News

முற்போக்கு சம்பள முறையில் 32 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெற்றனர்

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது

துப்பாக்கி வைத்திருந்ததாக இந்தியப் பிரஜை மீது குற்றச்சாட்டு

பாலியல் ஒழுக்கக்கேடான நடவடிக்கை: இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்


