கடந்த ஆண்டு முதல், 5 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான விற்பனை இயந்திர முதலீட்டு திட்ட மோசடி குறித்து 57 புகார்கள் கிடைக்க பெற்றிருப்பதாக அரச மலேசிய போலீஸ் படை தெரிவித்துள்ளது.
இதுக்குறித்து, குற்றவியல் சட்டம் 420 ஆவது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொண்டு வருவதாக குற்றப்புலனாய்வு துறையின் இயக்குநர் Datuk Seri Ramli Mohamed Yoosuf தெரிவித்தார்.
இந்த முதலீட்டு மோசடி திட்டத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் உடனுக்குடன் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தகைய முதலீட்டு மோசடி சம்பவங்களில் எளிதில் பொது மக்கள் தங்களை ஈடுபடுத்தி கொள்வதை தவிர்க்குமாறும் எப்பொழுதும் கவனமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளும்படி Ramli Mohamed கேட்டுக் கொண்டார்.








