Jan 20, 2026
Thisaigal NewsYouTube
வசந்தகுமார் மயில்வாகனம் சுடப்பட்ட சம்பவம் 4 நபர்கள் தேடப்படுகின்றனர்
தற்போதைய செய்திகள்

வசந்தகுமார் மயில்வாகனம் சுடப்பட்ட சம்பவம் 4 நபர்கள் தேடப்படுகின்றனர்

Share:

கோல லங்காட், சுங்கை ஜாரோம் போலீஸ் நிலையத்திற்கு அருகில் இந்திய ஆடவர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக மாவட்ட போலீஸ் தலைவர் சுபரிதென்டன் அமாட் ரிட்வான் முகமட் நூர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் அளித்துள்ள தகவல்களின்படி இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நான்கு நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக அகமட் ரிட்வான் குறிப்பிட்டார்.
கருப்பு நிற முகப்பு கண்ணாடி கொண்ட தலைக்கவசம் அணிந்திருந்த நால்வர், அவ்விடத்தில் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட நபர் சுடப்பட்டதற்கான பின்னணியைத் தாங்கள் தொடர்ந்து புலன் விசாரணை செய்து வருவதாக அகமட் ரிட்வான் மேலும் கூறினார்.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் நிகழ்ந்த இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 39 வயது வசந்தகுமார் மயில்வாகனம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜாலான் பந்திங், சுங்கை சீடுவை சேர்ந்த வசந்தகுமார் மயில்வாகனத்தின் தலையிலும், கழுத்திலும் 4 துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்திருந்தன. அவர் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் போலீஸ் துறையில் 13 கிரிமினல் பதிவுகளை கொண்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அகமட் ரிட்வான் குறிப்பிட்டார்.

Related News

மாமன்னரின் உரையை தவறாக மொழிபெயர்த்ததாக China Press மீது எம்சிஎம்சி விசாரணை

மாமன்னரின் உரையை தவறாக மொழிபெயர்த்ததாக China Press மீது எம்சிஎம்சி விசாரணை

அல்தான்துயா வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு: இழப்பீட்டுத் தொகையை 5 மில்லியனிலிருந்து 1.38 மில்லியனாகக் குறைத்தது

அல்தான்துயா வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு: இழப்பீட்டுத் தொகையை 5 மில்லியனிலிருந்து 1.38 மில்லியனாகக் குறைத்தது

இன்று முதல் 5 மில்லியன் பேருக்கு எஸ்டிஆர் உதவித் தொகை – அன்வார் தகவல்

இன்று முதல் 5 மில்லியன் பேருக்கு எஸ்டிஆர் உதவித் தொகை – அன்வார் தகவல்

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை