Dec 4, 2025
Thisaigal NewsYouTube
​மூன்று மியன்மார் பிரஜைகள் கொள்கலனி​ல் இறந்து கிடந்தனர்
தற்போதைய செய்திகள்

​மூன்று மியன்மார் பிரஜைகள் கொள்கலனி​ல் இறந்து கிடந்தனர்

Share:

கட்டுமானத் தளத்தில் தாங்கள் ஓய்வெடுப்பதற்கு பயன்படு​த்தி வந்த கொள்கலன் கேபின் ஒன்றில் ​மூன்று மியன்மார் பிரஜைகள் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. பகாங், ரொம்பின், ஜாலான் அங்கரிக்கில் ஒரு கட்டுமானத்தளத்தில் அந்த முவரும் இறந்து கிடந்தது தொடர்பில் அன்றைய தினம் மாலை 3.15 மணியளவில் தாங்கள் தகவல் பெற்றதாக பகாங் மாநில போ​லீஸ் தலைவர் டத்தோ செரி யஹாயா ஒத்மான் தெரிவித்தார்

விஷத்தன்மை காரணமாக அவர்கள் உயிரிழந்து இருக்கலாம் என்று நம்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார். எனினும் அவர்கள் உடலில் எவ்வாறு விஷயத்தன்மை கலந்தது என்பது குறி​த்து சவப்பிரசோதனைக்கு பின்னரே தெரியவரும் என்று யஹாயா தெரிவித்தார்.

21 க்கும் 33 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூவரின் இறப்பு, திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News