Jul 4, 2026
Thisaigal NewsYouTube
ஒரு கோடி ரிங்கிட் மதிப்புள்ள கஞ்சாப் பூ பறிமுதல்
தற்போதைய செய்திகள்

ஒரு கோடி ரிங்கிட் மதிப்புள்ள கஞ்சாப் பூ பறிமுதல்

Share:

கோத்தா பாரு, ஜூலை.28-

கிளந்தான், ரந்தாவ் பஞ்சாங்கில் சுங்கத்துறை மேற்கொண்ட அதிரடிச் சோதனை நடவடிக்கையில் ஒரு கோடி ரிங்கிட் மதிப்புள்ள 102 கிலோ எடை கொண்ட கஞ்சாப் பூ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரந்தாவ் பங்சாங் பேருந்து நிலையத்திலும், தீர்வையற்றப் பகுதியிலும் நின்று கொண்டு இருந்த இரண்டு பெண்கள் மற்றும் ஓர் ஆடவரைச் சுங்கத்துறை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது பெரிய அளவிலான கஞ்சாப் பூ பறிமுதல் செய்யப்பட்டதாக கிளந்தான் மாநில சுங்கத்துறை இயக்குநர் வான் ஜமால் அப்துல் சலாம் வான் லோங் தெரிவித்தார்.

முதல் சோதனை கடந்த வாரம் புதன்கிழமை காலை 10.30 மணிக்கு தீர்வையற்றப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. அங்கே கைவிடப்பட்ட ஒரு பை கைப்பற்றப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு பெண், சிறு பொட்டலங்களாக 32 பாக்கேட்டுகளில் கஞ்சாப் பூவை விட்டுச் சென்றதது அவரைக் கைது செய்ய பின்னர் தெரியவந்தது.

அந்தப் பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்னர் மேலும் ஓர் ஆணும், பெண்ணும் ரந்தாவ் பஞ்சாங் பேருந்து நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 60 பாக்கேட்டுகளை உள்ளடக்கிய கஞ்சாப் பூவைக் கொண்ட மேலும் இரண்டு பைகள் கைப்பற்றப்பட்டதாக வான் ஜமால் அப்துல் சலாம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது