இன்று கோல கெடா கடல் பகுதியில் நடத்தப்பட்ட ஓபி பெர்செபாடு சோதனையின்போது போதைப் பொருள் உட்கொண்டு துறைமுகப் பகுதிகளிலும் படகுகளிலும் இருந்த 25 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மரிதிம் மலேசியாவின் கோல கெடா பகுதியின் இயக்குநர் கொமான்டர் மரிதிம் நோர் அஸ்ரியாந்தி இஷாக் தெரிவிக்கயில், தமது தரப்பும் மலேசிய போதைப் பொருள் தடுப்பு நிறுவனமான ஏஏடிகேவின் அதிகாரிகளும் இணைந்து இந்தச் சோதனையை நடத்தியதாகக் குறிப்பிட்டார்.
தடுத்து வைக்கப்பட்ட 20 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களை ஏஏடிகேவிடம் ஒப்படைத்திருப்பதாகவும் அவர்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்வார்கள் எனவும் நோர் அஷ்ரியாந்தி இஷாக் கூறினார்.
மீனவர்களிடையே போதைப் பொருள் நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகவும் இது போன்ற சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளை மரிதிம் மலேசியாவின் ஒரு போதும் அனுமதிக்காது எனவும் அவர் மேலும் சொன்னார்.








