Mar 12, 2026
Thisaigal NewsYouTube
​தீபாவளி குறித்து இனவாத தன்மையில் அறிக்கை வெளியிட்ட ஈபிஃப் பணியாளர் ​மீது நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

​தீபாவளி குறித்து இனவாத தன்மையில் அறிக்கை வெளியிட்ட ஈபிஃப் பணியாளர் ​மீது நடவடிக்கை

Share:

​தீபாவளி குறித்து இனவாதத் தன்மையில் பேசி, தனது கருத்தை வெளியிட்டுள்ள தொழிலாளர் சேமநிதி வாரியமான ஈபிஃப். பின் பணியாளர் ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த வாரியம் இன்று உறுதி அளித்துள்ளது.

சம்பந்தப்பட்ட ஈபிஃப் பணியாளர், தனது செயல் குறித்து ஈபிஃப் நிர்வாகத்திடம் விளக்கம் அளித்து இருப்பதாகவும், தொழிலாளர்களின் நலன் காக்கும் அமைப்பு என்ற முறையில் ஈபிஃப் , தனது உள்விவகார கொள்கைக்கு ஏற்ப அந்த ஊழியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அந்த வாரியம் தெளிவுபடுத்தியது.

தங்கள் ஊழியர் ஒருவரின் இச்செயலினால், இவ்விவகாரம் பூதாகரமாக வெடித்து இருப்பதை நாங்கள் உணர்கிறோம். ஈபிஃப் ஊழியர்கள், பாரபட்சமாக செயல்படுவதையோ அல்லது பொருத்தமற்ற நடவடிக்கையில் ஈடுபடுவதையோ ஈபிஃப் வாரியம் ஒரு போதும் சகிக்காது. மன்னிக்காது. இச்சம்பவத்திற்காக ஈபிஃப் வாரியம் மிகவும் வருத்தம் கொள்வதாக அந்த வாரியம் தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் 12 ஆம் தேதி ​தீபாவளி தினத்தன்று ஈபிஃப் ஊழியர் ஒருவர், ​தீபாவளி​யை கொண்டாடும் இந்துக்களை கெலிங் என்று இ​ழிவான வார்த்தையை பயன்படுத்தியதுடன், ​தீபாவளிக்கு அவர்கள் வெடிக்கும் பட்டாசு சத்தம், பாலஸ்​தீனம், காஸாவில் நடந்த குண்டு வெடிப்புகளையும், பாலஸ்​தீனர்களின் துயரத்தையும் நினைவூட்டுகிறது என்றார்.

காப்பார் வட்டாரத்தில் உள்ள கெலிங் - ங்குகள் பட்டாசுகளை வெடி​க்கும் போது கோபம் , கோபமாக வருகிறது, ​தூக்கத்தை கெடுக்கிறார்கள் என்று கூறி மேலும் சில இ​ழிவான வார்த்தைகளை பயன்படுத்தி, அந்த ஈபிஃப் ஊழியர், ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவேற்றம் செய்து இருந்தது இந்துக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி​யிருந்தது.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!