May 2, 2026
Thisaigal NewsYouTube
கேஎல்ஐஏ 2 -இல் சீன நாட்டைச் சேர்ந்த பெண் உயிரிழப்பு: போலீசார் விசாரணை
தற்போதைய செய்திகள்

கேஎல்ஐஏ 2 -இல் சீன நாட்டைச் சேர்ந்த பெண் உயிரிழப்பு: போலீசார் விசாரணை

Share:

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் முனையம் 2-இன் வளாகத்தில் நேற்று பிற்பகல் ஏற்பட்ட துயரச்சம்பவத்தில், கட்டிடத்தின் விளிம்பிலிருந்து கீழே விழுந்து சீன நாட்டைச் சேர்ந்த 27 வயது பெண் உயிரிழந்தார்.

நேற்று பிற்பகல் 2.20 மணியளவில், விமான நிலையத்தின் மூன்றாவது மாடி பால்கனியின் விளிம்பில் நின்ற அந்த பெண், அழுதபடி, ஆவேசமாகக் கத்திக்கொண்டிருந்ததாக கேஎல்ஐஏ போலீஸ் தலைவர் எம். ரவி தெரிவித்துள்ளார்.

அவரை அமைதிப்படுத்த விமான நிலைய பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் முயன்ற போதிலும் அது பலனளிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், உதவ முயன்ற பாதுகாப்பு அதிகாரியிடம், அப்பெண் போராடிய நிலையில், சமநிலை இழந்து KLIA 2 சரக்கு ஏற்றுமதி பகுதியில் கீழே விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அப்பெண்ணை மீட்ட மருத்துவ அதிகாரிகள் அவரை புத்ராஜெயா மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

என்றாலும், மாலை 5.09 மணியளவில் அப்பெண் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பிரசவத்திற்குப் பிந்தைய சிறப்பு உதவித்தொகை / 1.32 லட்சம் பெண்கள் பயனடையவார்கள் என அன்வார் அறிவிப்பு

பிரசவத்திற்குப் பிந்தைய சிறப்பு உதவித்தொகை / 1.32 லட்சம் பெண்கள் பயனடையவார்கள் என அன்வார் அறிவிப்பு

2030-குள் குறைந்த பட்ச மாத ஊதியம் 3000 ரிங்கிட்டாக உயர்த்த இலக்கு - அமைச்சர் ரமணன் அறிவிப்பு

2030-குள் குறைந்த பட்ச மாத ஊதியம் 3000 ரிங்கிட்டாக உயர்த்த இலக்கு - அமைச்சர் ரமணன் அறிவிப்பு

எல்லை தாண்டும் மலேசியத் தொழிலாளர்களுக்கு PERKESO காப்பீடு - அன்வார் அறிவிப்பு

எல்லை தாண்டும் மலேசியத் தொழிலாளர்களுக்கு PERKESO காப்பீடு - அன்வார் அறிவிப்பு

அடுத்தாண்டு சித்திரா பௌணர்மி திருவிழாவில் தற்காலிக வணிகக் கூடாரங்கள் இடம் மாற்றம் காணும் - டத்தோ சிவநேசன் தகவல்

அடுத்தாண்டு சித்திரா பௌணர்மி திருவிழாவில் தற்காலிக வணிகக் கூடாரங்கள் இடம் மாற்றம் காணும் - டத்தோ சிவநேசன் தகவல்

தெலுக் இந்தான் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய சித்ரா பௌர்ணமி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது

தெலுக் இந்தான் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய சித்ரா பௌர்ணமி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது

வேலை இழக்கும் தொழிலாளர்களின் நலனுக்காக 710 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்படும் - அன்வார் அறிவிப்பு

வேலை இழக்கும் தொழிலாளர்களின் நலனுக்காக 710 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்படும் - அன்வார் அறிவிப்பு