Mar 8, 2026
Thisaigal NewsYouTube
தென்கிழக்கு ஆசியாவிலேயே மிக உயரமான கொடிக் கம்பம்: ஷா ஆலாமில் சுல்தான் ஷராஃபுடின் திறந்து வைத்தார்
தற்போதைய செய்திகள்

தென்கிழக்கு ஆசியாவிலேயே மிக உயரமான கொடிக் கம்பம்: ஷா ஆலாமில் சுல்தான் ஷராஃபுடின் திறந்து வைத்தார்

Share:

ஷா ஆலாம், மார்ச்.08-

ஷா ஆலம், டத்தாரான் சிலாங்கூரில் அமைக்கப்பட்டுள்ள 120 மீட்டர் உயரமுள்ள மாநிலக் கொடிக் கம்பத்தை சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா இன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். சுமார் 8.5 மில்லியன் ரிங்கிட் செலவில் உருவாக்கப்பட்ட இந்தச் அடையாளச் சின்னம், தென்கிழக்கு ஆசியாவிலேயே மிக உயரமான கொடிக்கம்பம் என Malaysia Book of Records அங்கீகாரம் பெற்றுள்ளது. சிலாங்கூர் மாநில மக்களிடையே ஒற்றுமையையும் தேசப்பற்றையும் வளர்க்கும் அடையாளமாக இது திகழும் என்றும், ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினத்தை முன்னிட்டு இங்கு 10 நாட்களுக்கு ஜாலூர் கெமிலாங் ஏற்றப்படும் என்றும் சுல்தான் ஷாராஃபுடின் அறிவித்துள்ளார்.

Related News