May 21, 2026
Thisaigal NewsYouTube
10 அந்நிய காவலர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

10 அந்நிய காவலர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

Share:

கோலாலம்பூர்,ஜன.12
லெம்பா க்லாங் - கை சுற்றியுள்ள 7 இடங்களில் சட்டவிரோதமாக நாட்டில் நுழைந்து பணி புரிந்து வந்த 10 அந்நிய பாதுகாப்பு காவலர்களை உள்துறை அமைச்சு கைது செய்தனர்.

கடந்த புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையில் பாகிஸ்தான், இந்திய, இலங்கை போன்ற வெளிநாட்டு காவலர்கள் கைது செய்யப்பட்டதுடன் சட்டவிரோதமாக செயல்பட்ட 4 பாதுகாப்பு நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டதாக அமலாக்க மற்றும் கட்டுப்பாட்டு பிரிவின் செயலாளர் நிக் யுசைமி யுசோஃப் தெரிவித்தார்.

விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் உரிமம் ரத்து செய்யப்படும் வரையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி யுசைமி யுசோஃப் கூறினார்.

குற்றவாளி என்று நிரூபிக்கபட்டால் குறைந்த பட்சம் 10,000 வெள்ளி அபராதம் அல்லது ஆறு மாத சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படும் என்று யுசைமி யுசோஃப் நேற்றிரவு ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

Related News