கோலாலம்பூர், ஶ்ரீ செமாராக் அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் பாராங்கை ஏந்திக்கொண்டு சுற்றித் திரிந்த ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புத்தி சுவாதீனமற்ற அந்த ஆடவர், கோலாலம்பூர், பெரிய மருத்துவமனையில் மனநல மருத்துவ சிகிச்சைப் பிரிவிலிருந்து அண்மையில்தான் வீடு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டதாக வங்சா மாஜு மாவட்ட போலீஸ் தலைவர் அஷாரி அபு சாமா தெரிவித்தார்.
அந்த நபர், வீட்டில் முறையாக மருந்துகளை உட்கொள்ளாததால், மனோரீதியாக மேலும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். அந்நபர், பாராங்கை ஏந்திக்கொண்டு சுற்றித் திரிவது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
,அந்நபர், தற்போது கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அஷாரி அபு சாமா மேலும் கூறினார்.








