Mar 14, 2026
Thisaigal NewsYouTube
புத்தி சுவாதீனமற்ற ஆடவர் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

புத்தி சுவாதீனமற்ற ஆடவர் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டார்

Share:

கோலாலம்பூர், ஶ்ரீ செமாராக் அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் பாராங்கை ஏந்திக்கொண்டு சுற்றித் திரிந்த ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புத்தி சுவாதீனமற்ற அந்த ஆடவர், கோலாலம்பூர், பெரிய மருத்துவமனையில் மனநல மருத்துவ சிகிச்சைப் பிரிவிலிருந்து அண்மையில்தான் வீடு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டதாக வங்சா மாஜு மாவட்ட போலீஸ் தலைவர் அஷாரி அபு சாமா தெரிவித்தார்.

அந்த நபர், வீட்டில் முறையாக மருந்துகளை உட்கொள்ளாததால், மனோரீதியாக மேலும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். அந்நபர், பாராங்கை ஏந்திக்கொண்டு சுற்றித் திரிவது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

,அந்நபர், தற்போது கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அஷாரி அபு சாமா மேலும் கூறினார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்