Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சட்டவிரோத விளைச்சல்: லட்சக்கணக்கான ரிங்கிட்டை ஈட்டிய மூசா கிங் தோட்ட நடவாளர் உட்பட ஐவர் கைது
தற்போதைய செய்திகள்

சட்டவிரோத விளைச்சல்: லட்சக்கணக்கான ரிங்கிட்டை ஈட்டிய மூசா கிங் தோட்ட நடவாளர் உட்பட ஐவர் கைது

Share:

குவாந்தான், செப்டம்பர்.30-

சட்டவிரோத நில பயன்பாடு மூலம் லட்சக்கணக்கான ரிங்கிட்டை ஈட்டியதாகச் சந்தேகிக்கப்படும் மூசா கிங் டுரியான் தோட்டங்களின் சட்டவிரோத நிலக் குடியேற்றவாசிகள் உட்பட ஐவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்தது.

பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் அரசாங்கத்திற்குச் சொந்தமான பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் அத்துமீறி நுழைந்து, மூசா கிங் டுரியான் மரங்களை நடவுச் செய்து, அதன் வாயிலாக கிடைக்கப் பெற்ற பணத்தை சட்டவிரோத பண மாற்றத்திற்கு பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஒரு தோட்டப் பணியாளர் உட்பட ஐவரும், இன்று
குவாந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டனர்.

மாஜிஸ்திரேட் முகமட் ஃபௌஸான் முகமட் சுஹைமி முன்னிலையில் நிறுத்தப்பட்ட ஐவரும், வரும் அக்டோபர் 3 ஆம் தேதி வரை 4 நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு அனுமதி பெறப்பட்டது.

40 க்கும் 60 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஐவரும் நேற்று பகாங், ரவூப் எஸ்பிஆர்எம் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்டதாக எஸ்பிஆர்எம் வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 2024 ஆம் ஆண்டிலிருந்து 2025 ஆம் ஆண்டு வரை இவர்கள் அனைவரும் மூசா கிங் டுரியான் மரங்களிள் விளைச்சலில் கிடைக்கப் பெற்றப் பணத்தைச் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்