மனைவியைக் கொலை செய்வதாக மிரட்டிய முன்னாள் போலீஸ் அதிகாரியான முஹமட் சிருல் அக்மால் ரசாலிக்கு தும்பாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 4,500 ரிங்கிட் அபராதம் விதித்தது.
கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி வாகாஃப் பாரு, கம்போங் செமாட் ஜால் பகுதியில் வீட்டில் ஆவேசமாக நடந்து கொண்ட அவர், மனைவியைக் கொலை செய்வதாக மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த மிரட்டலை மனைவியின் தாயும், குழந்தையும் பார்த்த நிலையில், அச்சமடைந்த மனைவி போலீசாரைத் தொடர்பு கொண்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
தனது மனைவியின் தாயார், திருமண வாழ்க்கையில் அடிக்கடி தலையிடுவதாக அவர் கொண்டிருந்த அதிருப்தியே சம்பவத்துக்குக் காரணம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், அபராதத்தை செலுத்தத் தவறினால் 9 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








