Aug 16, 2026
Thisaigal NewsYouTube
ஜாலூர் கெமிலாங் குறித்து மலேசியர்களிடையே அதிகரிக்கும் விழிப்புணர்வு - தொடர்புத் துறை அமைச்சர் தகவல்
தற்போதைய செய்திகள்

ஜாலூர் கெமிலாங் குறித்து மலேசியர்களிடையே அதிகரிக்கும் விழிப்புணர்வு - தொடர்புத் துறை அமைச்சர் தகவல்

Share:

தேசிய கொடியின் கோடுகளின் எண்ணிக்கை, வண்ணங்களின் வரிசை உள்ளிட்ட அதன் வடிவமைப்பு குறித்து மலேசியர்களிடையே விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாக தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஃபஹ்மி ஃபாடில் தெரிவித்துள்ளார்.

தேசிய தின மாதக் கொண்டாட்டங்களின் போது தேசியக் கொடியை மதித்து பயன்படுத்துவது குறித்து மக்கள் அதிக கவனம் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், பத்து புரூக், திரங்கானு பகுதியில் முழுமையற்ற ஜாலூர் கெமிலாங் காட்சிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் விசாரணையில் இருப்பதால், அது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் ஃபஹ்மி தெரிவித்துள்ளார்.

வாகனங்களில் கொடிகளை பொருத்துவதற்குப் பதிலாக, பெயின்ட் சேதமடைவதைத் தவிர்க்க காந்தங்கள் பொருத்திய ஜாலூர் கெமிலாங் ஸ்டிக்கர்களைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், இந்த மாதம் தேசிய தினம் மற்றும் அடுத்த மாதம் மலேசிய தினத்திற்கான கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் சுமுகமாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி, சுதந்திர தினத்திற்கு முந்தைய இரவு மெர்டெக்கா மைதானம் மற்றும் டத்தாரான் மெர்டெக்கா ஆகிய இடங்களில் இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி: பல முறை, பல நாடுகளுக்குக் கடத்தியது விசாரணையில் அம்பலம்

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி: பல முறை, பல நாடுகளுக்குக் கடத்தியது விசாரணையில் அம்பலம்

மனைவியை கொலை செய்வதாக மிரட்டிய முன்னாள் போலீஸ்காரருக்கு 4,500 ரிங்கிட் அபராதம்

மனைவியை கொலை செய்வதாக மிரட்டிய முன்னாள் போலீஸ்காரருக்கு 4,500 ரிங்கிட் அபராதம்

ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் கூடுதலாக 1 மில்லியன் ரிங்கிட் – அன்வார் அறிவிப்பு

ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் கூடுதலாக 1 மில்லியன் ரிங்கிட் – அன்வார் அறிவிப்பு

“அவுக்குவிற்கு (AUKU) பதிலாக  புதிய சட்டம் உருவாக்கப்பட்டாது” – அன்வார் திட்டவட்டம்

“அவுக்குவிற்கு (AUKU) பதிலாக புதிய சட்டம் உருவாக்கப்பட்டாது” – அன்வார் திட்டவட்டம்

பெந்தோங்கில் இந்து ஆலய சிலை உடைப்பு: உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் உறுதி

பெந்தோங்கில் இந்து ஆலய சிலை உடைப்பு: உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் உறுதி

“மலாய்க்காரர்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் பிற இனங்களால் அல்ல; போதைப்பொருள் பழக்கத்தினால்” – சைஃபுடின் இஸ்மாயில் கவலை

“மலாய்க்காரர்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் பிற இனங்களால் அல்ல; போதைப்பொருள் பழக்கத்தினால்” – சைஃபுடின் இஸ்மாயில் கவலை