Aug 16, 2026
Thisaigal NewsYouTube
பெந்தோங்கில் இந்து ஆலய சிலை உடைப்பு: உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் உறுதி
தற்போதைய செய்திகள்

பெந்தோங்கில் இந்து ஆலய சிலை உடைப்பு: உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் உறுதி

Share:

பெந்தோங், புக்கிட் திங்கியில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் சிலை சேதப்படுத்தப்பட்டதாக வெளியான தகவல் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

சேதமடைந்த சிலையின் புகைப்படங்கள் நேற்று சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, போலீசாரின் கவனத்திற்கு இந்த விவகாரம் வந்ததாக பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஸைஹாம் காஹார் தெரிவித்துள்ளார்.

எனினும், இதுவரை எந்தவொரு போலீஸ் புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தை பெந்தோங் போலீஸ் தலைமையகம் தீவிரமாக எடுத்துக் கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

மேலும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்பவோ, ஊகங்களை வெளியிடவோ வேண்டாம் என்று அனைத்து தரப்பினரையும் அவர் கேட்டுக் கொண்டார்.

குறிப்பாக சமய விவகாரங்களை உள்ளடக்கிய தகவல்கள் பதற்றத்தை ஏற்படுத்தாமல் பொறுப்புடன் செயல்படுமாறும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, சம்பவம் குறித்து மலேசிய இந்து சங்கம் விசாரணை நடத்தி வருகின்றது.

Related News

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி: பல முறை, பல நாடுகளுக்குக் கடத்தியது விசாரணையில் அம்பலம்

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி: பல முறை, பல நாடுகளுக்குக் கடத்தியது விசாரணையில் அம்பலம்

ஜாலூர் கெமிலாங் குறித்து மலேசியர்களிடையே அதிகரிக்கும் விழிப்புணர்வு - தொடர்புத் துறை அமைச்சர் தகவல்

ஜாலூர் கெமிலாங் குறித்து மலேசியர்களிடையே அதிகரிக்கும் விழிப்புணர்வு - தொடர்புத் துறை அமைச்சர் தகவல்

மனைவியை கொலை செய்வதாக மிரட்டிய முன்னாள் போலீஸ்காரருக்கு 4,500 ரிங்கிட் அபராதம்

மனைவியை கொலை செய்வதாக மிரட்டிய முன்னாள் போலீஸ்காரருக்கு 4,500 ரிங்கிட் அபராதம்

ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் கூடுதலாக 1 மில்லியன் ரிங்கிட் – அன்வார் அறிவிப்பு

ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் கூடுதலாக 1 மில்லியன் ரிங்கிட் – அன்வார் அறிவிப்பு

“அவுக்குவிற்கு (AUKU) பதிலாக  புதிய சட்டம் உருவாக்கப்பட்டாது” – அன்வார் திட்டவட்டம்

“அவுக்குவிற்கு (AUKU) பதிலாக புதிய சட்டம் உருவாக்கப்பட்டாது” – அன்வார் திட்டவட்டம்

“மலாய்க்காரர்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் பிற இனங்களால் அல்ல; போதைப்பொருள் பழக்கத்தினால்” – சைஃபுடின் இஸ்மாயில் கவலை

“மலாய்க்காரர்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் பிற இனங்களால் அல்ல; போதைப்பொருள் பழக்கத்தினால்” – சைஃபுடின் இஸ்மாயில் கவலை