ஜோகூர், பூலாய் நாடாளுமன்றம் மற்றும் ம் சிம்பாங் ஜெராம் சட்டமன்றம் ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் போட்டியிடக்கூடிய பெரிக்காத்தான் நேஷனலின் வேட்பாளர்கள் பெயர்களை அக்கூட்டணியின் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் அடுத்த வாரம் அறிவிக்கவிருக்கிறார்.
வேட்பாளர்கள் முடிவு செய்யப்பட்ட பின்னர் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் என்ற முறையில் முகைதீன், வேட்பாளர்களின் பெயர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று ஜோகூர் மாநில பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டத்தோ டாக்டர். சஹ்ருடின் ஜமால் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜுலை 23 ஆம் தேதி உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோஸ்ரீ சலாவுதீன் அயூப் காலமானதைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த பூலாய் நாடாமன்றத் தொகுதியிலும், சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதியிலும் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

Related News

புக்கிட் தாகார் பன்றி வளர்ப்புத் திட்டத்தை ரத்து செய்க: சிலாங்கூர் அரசுக்கு பிரதமர் அன்வார் வேண்டுகோள்

டாவோஸ் 2026: உலகப் பொருளாதார மன்றத்தில் மலேசியாவின் டிஜிட்டல் புரட்சி - அமைச்சர் கோவிந்த் சிங் தியோ அதிரடி

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.9992 ஆக உயர்வு: 5 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது

மலேசியாவில் பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காகச் சமூகச் சேவை தண்டனை: இந்தோனேசியப் பெண்மணிக்குத் தீர்ப்பு

14 லட்சம் ரிங்கிட் திருட்டுப் பணத்தைப் பெற்றதாக முன்னாள் நிர்வாகி மீது குற்றச்சாட்டு


