தெலுக் செங்ஙாட், ஃபெல்டா ஆயிர் தாவார் 4 - இல் 60 வயதிற்கு உட்பட்ட தம்பதியர்கள் உயிரிழந்தனர்.
கோத்தா திங்கி மருத்துவமனையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மனைவி நொரசிசா ஜஸ்ரி பற்றிய தகவலை கூற அவரின் வீட்டிற்கு சென்ற போது வீட்டில் அவரின் கணவர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்ததாக பக்கத்து வீட்டுக்காரர் தெரிவித்தார்.
அதிகாலை 4 மணியளவில் முஹமாட் பாசார் என்கிற அம்முதியவர் வீட்டில் சுயநினைவின்றி இருந்துள்ளார்.
அவ்வீட்டில் இருவர் மட்டுமே இருந்து வருவதாகவும் மனைவி இறந்த அடுத்த ஒரு மணி நேரத்திலேயே கணவன் இறந்ததாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஹுசின் சமோரா கூறினார்.








