Mar 14, 2026
Thisaigal NewsYouTube
கணவர் மனைவி இருவரும் இறந்தனர்
தற்போதைய செய்திகள்

கணவர் மனைவி இருவரும் இறந்தனர்

Share:

தெலுக் செங்ஙாட், ஃபெல்டா ஆயிர் தாவார் 4 - இல் 60 வயதிற்கு உட்பட்ட தம்பதியர்கள் உயிரிழந்தனர்.

கோத்தா திங்கி மருத்துவமனையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மனைவி நொரசிசா ஜஸ்ரி பற்றிய தகவலை கூற அவரின் வீட்டிற்கு சென்ற போது வீட்டில் அவரின் கணவர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்ததாக பக்கத்து வீட்டுக்காரர் தெரிவித்தார்.

அதிகாலை 4 மணியளவில் முஹமாட் பாசார் என்கிற அம்முதியவர் வீட்டில் சுயநினைவின்றி இருந்துள்ளார்.

அவ்வீட்டில் இருவர் மட்டுமே இருந்து வருவதாகவும் மனைவி இறந்த அடுத்த ஒரு மணி நேரத்திலேயே கணவன் இறந்ததாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஹுசின் சமோரா கூறினார்.

Related News