Jul 5, 2026
Thisaigal NewsYouTube
மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது
தற்போதைய செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது

Share:

சுங்கை பூலோ, ஜூலை.07-

சுங்கை பூலோ எம்.ஆர்.டி. ரயில் நிலையத்தில் கத்திரிகோலைக் காட்டி பொதுமக்களை அச்சுறுத்தியதாக நம்பப்படும் மனநலம் பாதிக்கப்பட்ட நபரைப் போலீசார் கைது செய்தனர்.

நேற்று பின்னிரவு ரயில் நிலையத்தின் உதவி போலீஸ்காரர்கள் மூலம் அந்த நபர் வளைத்துப் பிடிக்கப்பட்டதாக சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஹாஃபிஸ் முகமட் நோர் தெரிவித்தார்.

அதற்கு முன்னதாக இரவு 11.15 மணியளவில் ஒரு பெண்ணிடமிருந்து ஓர் அவசர அழைப்பைப் போலீசார் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

மனநலம் பாதிக்கப்பட்டவரான தனது தந்தை, கத்திரிகோலை எடுத்துக் கொண்டு, ஒரு நபரைத் துரத்திக் கொண்டு எம்.ஆர்.டி. நிலையத்தை நோக்கி ஓடுகிறார் என்று அந்த பெண் புகார் அளித்து இருந்ததாக முகமட் ஹாஃபிஸ் தெரிவித்தார்.

அந்த நபரை வரும் ஜுலை 9 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது