போதைப்பொருள் வாங்குவதற்கு 20 வெள்ளி கேட்டு, தனது தாயாரின் தலையிலேயே மிதித்து காயப்படுத்திய முன்னாள் இராணுவ வீரரான 32 வயது நபரை போலீஸ் கைது செய்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை கிளந்தான், Tanah Merah, Kampung Guai Jedok என்ற இடத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் மீதான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து அந்த நபரை போலீசார் கைது செய்து இருப்பதாக தானா மேரா மாவட்ட போலீஸ் தலைவர் Mohd Haki Hasbullah தெரிவித்தார். இச்சம்பவம் நிகழும் போது அந்த மூதாட்டியின் பேத்தி, தமது பாட்டி தாக்கப்படுவதை கைப்பேசியில் பதிவு செய்ததாக நம்பப்படுகிறது. கைது செய்யப்பட்ட நபர், தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக Haki Hasbullah குறிப்பிட்டார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


