May 1, 2026
Thisaigal NewsYouTube
தாயை மிதித்து காயப்படுத்திய மகன் கைது
தற்போதைய செய்திகள்

தாயை மிதித்து காயப்படுத்திய மகன் கைது

Share:

போதைப்பொருள் வாங்குவதற்கு 20 வெள்ளி கேட்டு, தனது தாயாரின் தலையிலேயே மிதித்து காயப்படுத்திய முன்னாள் இராணுவ வீரரான 32 வயது நபரை போ​லீஸ் கைது செய்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை கிளந்தான், Tanah Merah, Kampung Guai Jedok என்ற இடத்தில் நிகழ்ந்த இச்சம்பவம்​ மீதான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து அந்த நபரை போலீசார் கைது செய்து இருப்பதாக தானா மேரா மாவட்ட போ​லீஸ் தலைவர் Mohd Haki Hasbullah தெரிவித்தார். இச்சம்பவம் நிகழும் போது அந்த ​மூதாட்டியின் பேத்தி, தமது பாட்டி தாக்கப்படுவதை கைப்பேசியில் பதிவு செய்ததாக நம்பப்படுகிறது. கைது செய்யப்பட்ட நபர், தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக Haki Hasbullah குறிப்பிட்டார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி