Jun 15, 2026
Thisaigal NewsYouTube
தாயை மிதித்து காயப்படுத்திய மகன் கைது
தற்போதைய செய்திகள்

தாயை மிதித்து காயப்படுத்திய மகன் கைது

Share:

போதைப்பொருள் வாங்குவதற்கு 20 வெள்ளி கேட்டு, தனது தாயாரின் தலையிலேயே மிதித்து காயப்படுத்திய முன்னாள் இராணுவ வீரரான 32 வயது நபரை போ​லீஸ் கைது செய்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை கிளந்தான், Tanah Merah, Kampung Guai Jedok என்ற இடத்தில் நிகழ்ந்த இச்சம்பவம்​ மீதான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து அந்த நபரை போலீசார் கைது செய்து இருப்பதாக தானா மேரா மாவட்ட போ​லீஸ் தலைவர் Mohd Haki Hasbullah தெரிவித்தார். இச்சம்பவம் நிகழும் போது அந்த ​மூதாட்டியின் பேத்தி, தமது பாட்டி தாக்கப்படுவதை கைப்பேசியில் பதிவு செய்ததாக நம்பப்படுகிறது. கைது செய்யப்பட்ட நபர், தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக Haki Hasbullah குறிப்பிட்டார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்