போதைப்பொருள் வாங்குவதற்கு 20 வெள்ளி கேட்டு, தனது தாயாரின் தலையிலேயே மிதித்து காயப்படுத்திய முன்னாள் இராணுவ வீரரான 32 வயது நபரை போலீஸ் கைது செய்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை கிளந்தான், Tanah Merah, Kampung Guai Jedok என்ற இடத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் மீதான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து அந்த நபரை போலீசார் கைது செய்து இருப்பதாக தானா மேரா மாவட்ட போலீஸ் தலைவர் Mohd Haki Hasbullah தெரிவித்தார். இச்சம்பவம் நிகழும் போது அந்த மூதாட்டியின் பேத்தி, தமது பாட்டி தாக்கப்படுவதை கைப்பேசியில் பதிவு செய்ததாக நம்பப்படுகிறது. கைது செய்யப்பட்ட நபர், தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக Haki Hasbullah குறிப்பிட்டார்.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை


