Dec 2, 2025
Thisaigal NewsYouTube
மூன்று கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

மூன்று கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

Share:

மலாக்கா, நவம்பர்.24-

பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் மூன்று கொள்ளையர்களைப் போலீசார் சுட்டுக் கொன்றனர்.

போலீசாரின் பட்டியலில் மிகவும் தேடப்பட்டவர்கள் என்று நம்பப்படும் அந்த மூன்று கொள்ளையர்களும் இன்று திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் மலாக்கா, அலோர் காஜா, டுரியான் துங்காலில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அந்த மூவரும் சுடப்படுவதற்கு முன்னதாக கொள்ளையர்களின் ஒருவன் போலீஸ்காரர் ஒருவரை பாராங்கினால் தாக்கியதில் அவரது கை கிட்டத்தட்ட துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஸுல்கைரி முக்தார் தெரிவித்தார்.

24 க்கும் 29 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூன்று கொள்ளையர்கள் கேங் DT கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று காலையில் அந்த செம்பனைத் தோட்டத்தில் போலீசார் நடத்திய ஓப் காசா நடவடிக்கையில் இந்தத் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் 30 வயது போலீஸ்காரருக்குக் கடும் காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று கொள்ளையர்களும் கடந்த 2024 ஆம் ஆண்டிலிருந்து மலாக்கா, நெகிரி செம்பிலான் மற்றும் சிலாங்கூரில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள் ஆவர்.

இவர்களால் 13 லட்சம் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டது. மூவரையும் சுட்டு வீழ்த்தியது மூலம் 3 வெட்டுக் கத்திகள், கையுறைகள், முகமூடிகள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக இன்று மலாக்காவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ ஸுல்கைரி முக்தார் தெரிவித்தார்.

Related News

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்

பினாங்கை ஒரு சிறப்புப் பிரதேசமாக மாற்றுவதை விட பெரியத் திட்டத்தை கெடா அரசு  கொண்டுள்ளது: மந்திரி பெசார் சனூசி கூறுகிறார்

பினாங்கை ஒரு சிறப்புப் பிரதேசமாக மாற்றுவதை விட பெரியத் திட்டத்தை கெடா அரசு கொண்டுள்ளது: மந்திரி பெசார் சனூசி கூறுகிறார்

அந்த ஆண் ஆசிரியர்கள் கல்விக்கழகங்களிலிருந்து வெளியேற்றப்படுவர்

அந்த ஆண் ஆசிரியர்கள் கல்விக்கழகங்களிலிருந்து வெளியேற்றப்படுவர்