Mar 13, 2026
Thisaigal NewsYouTube
அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.9992 ஆக உயர்வு: 5 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது
தற்போதைய செய்திகள்

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.9992 ஆக உயர்வு: 5 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது

Share:

கோலாலம்பூர், ஜனவரி.23-

வலுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் சாதகமான வருடாந்திர கண்ணோட்டத்தின் மதிப்பீடுகளுக்கு மத்தியில், அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு 4 ரிங்கிட் என்ற நிலையைத் தாண்டி, கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இன்று பிற்பகல் 2.19 மணி நிலவரப்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு 3.9992 ஆக வர்த்தகமாகி புதிய சாதனையைப் படைத்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து ரிங்கிட் சுமார் 1.5 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ள நிலையில், இன்று 4 ரிங்கிட் என்ற வலுவான தடையை உடைத்து 5 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டு இருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

மலேசிய மத்திய வங்கியான பேங்க் நெகாரா, தனது OPR வட்டி விகிதத்தை 2.75 விழுக்காட்டிலிருந்து மாறாமல் வைத்துள்ளது. இது சந்தை எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அமைந்ததுடன், விலை நிலைத்தன்மைக்கு மத்தியில் நாணயக் கொள்கை நிலையை உறுதிப்படுத்த உதவியது.

மலேசியாவின் முன்னணி நிதிச் சேவை குழுமமான Kenanga Research ஆய்வின்படி, அமெரிக்க டாலர் குறியீடு 99.0 புள்ளிகளுக்குக் கீழே சரிந்ததால் ரிங்கிட் மேலும் வலுடைந்துள்ளது. ஜப்பானிய அரசாங்கப் பத்திரங்களில் அதிகரித்த ஏற்ற இறக்கம் மற்றும் ஐரோப்பிய முதலீட்டாளர்கள் அமெரிக்க கருவூலப் பத்திரங்களை வைத்திருப்பதை குறைக்கலாம் என்ற கவலைகள் காரணமாக அமெரிக்க டாலர் பலவீனமடைந்ததுள்ளது என்று அந்த நிதிச் சேவை குழுமம் கூறுகிறது.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!