ஹரி ராயா பெருநாளையொட்டி, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில், மலேசிய மடானி திறந்த இல்ல பொது உபசரிப்பு 6 மாநிலங்களில் நடத்தப்படுவது, வரம்பு மீறியது என்பதுடன், சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கத்திற்குப் புத்ராஜெயா சவால் விடுவதற்கு ஒப்பாகும் என்று பெரிக்காத்தான் நேஷனல் துணைப் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹஸ்சான் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசாங்கத்தின் பொது உபசரிப்பை, மாநில அளவில் நடத்தப்படுவது துரதிர்ஷ்டமானதாகும். காரணம், இது மத்திய அரசாங்கத்திற்கும், மாநில அரசாங்கத்திற்கும் இடையிலான நல்லுறவை கட்டமைக்காது என்பதுடன் அதனால் பயன் ஏதும் இல்லை என்று பாஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான தக்கியுடின் ஹஸ்சான் குறிப்பிட்டார்.

Related News

குடியுரிமை பெற்றிருப்பது மட்டுமே ஒருவரின் தேசிய அடையாளத்தை நிரூபிக்காது: ஜசெகவின் 'Anak Malaysia' கருத்திற்கு பாஸ் கடும் விமர்சனம்

அரசாங்கம் மாறினால் சிபு பாலத் திட்டம் பாதிக்கப்படும் – சரவாக் முதல்வர் எச்சரிக்கைநான்

அமலாக்க அதிகாரி மீது தாக்குதல்: ஈப்போ மாநகராட்சி கடும் கண்டனம்

கங்காரில் மூட்டைக்குள் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு

சபாவில் வெள்ளம்: 5,500-க்கும் மேற்பட்ட வீடுகள், வணிக வளாகங்களில் குடிநீர் விநியோகம் பாதிப்பு


