ஹரி ராயா பெருநாளையொட்டி, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில், மலேசிய மடானி திறந்த இல்ல பொது உபசரிப்பு 6 மாநிலங்களில் நடத்தப்படுவது, வரம்பு மீறியது என்பதுடன், சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கத்திற்குப் புத்ராஜெயா சவால் விடுவதற்கு ஒப்பாகும் என்று பெரிக்காத்தான் நேஷனல் துணைப் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹஸ்சான் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசாங்கத்தின் பொது உபசரிப்பை, மாநில அளவில் நடத்தப்படுவது துரதிர்ஷ்டமானதாகும். காரணம், இது மத்திய அரசாங்கத்திற்கும், மாநில அரசாங்கத்திற்கும் இடையிலான நல்லுறவை கட்டமைக்காது என்பதுடன் அதனால் பயன் ஏதும் இல்லை என்று பாஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான தக்கியுடின் ஹஸ்சான் குறிப்பிட்டார்.

Related News

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்


