கோலாலம்பூர், டிசம்பர்.16-
இன்று தொடங்கி வரும் வியாழக்கிழமை வரை மூன்று மாநிலங்களில் கனத்த மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியா அறிவித்துள்ளது.
திரெங்கானு, பகாங் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யும் என்று இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் மெட்மலேசியா தெரிவித்துள்ளது.








