Mar 17, 2026
Thisaigal NewsYouTube
மாற்றுத்திறனாளியிடம் லஞ்சம் கேட்ட அரசு ஊழியர் கைது
தற்போதைய செய்திகள்

மாற்றுத்திறனாளியிடம் லஞ்சம் கேட்ட அரசு ஊழியர் கைது

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி 23 -

பினாங்கு, பாலேக் பூலௌ வில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளுக்கு ஒப்புதல் அளிக்க 450 வெள்ளி லஞ்சம் கேட்டதாக நம்பப்படும் அரசு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

30 வயதுடைய அந்நபர் அரசாங்க துறையிடமிருந்து மாதாந்திர உதவித் தொகை கிடைப்பதை அங்கீகரிக்க பாதிக்கப்பட்டவரிடம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி பாதிக்கப்பட்டவரை தொடர்பு கொண்ட அந்நபர் குறிப்பிடப்பட்ட தொகை கிடைத்த பின் அதில் தமக்கு ஒரு பங்கு தருமாறு கோரியுள்ளார்.

சந்தேகிக்கும் அந்நபர் கடந்த புதன்கிழமை இரவு 8:30 மணியளவில் பாலேக் பூலௌ வில் சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளியிடமிருந்து லஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்டதாக நேற்று தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து அந்நபர் பிப்ரவரி 27 ஆம் தேதி வரையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு