லஞ்சம் பெற்றதாக மலாக்கா மாநில முன்னாள் முதலமைச்சர் இட்ரீஸ் ஹரூன்னின் முன்னாள் அரசியல் செயலாளருக்கு எதிராக மலாக்கா, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
டத்தோ அந்தஸ்தைக் கொண்ட ரொஸ்லி ஹசான் என்ற அந்த முன்னாள் அரசியல் செயலாளர், மலாக்கா, தாமான் பொகோக் மாங்காவில் உள்ள தமது மனைவிக்குச் சொந்தமான பங்களா வீட்டைச் சீரமைப்பதற்காக லட்சம் பெற்றது உட்பட 4 லட்சத்து 8 ஆயிரத்து 736 வெள்ளியைக் கையூட்டாக பெற்றதாக அவருக்கு எதிராக மொத்தம் 12 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ரொஸ்லி ஹசான் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


