லஞ்சம் பெற்றதாக மலாக்கா மாநில முன்னாள் முதலமைச்சர் இட்ரீஸ் ஹரூன்னின் முன்னாள் அரசியல் செயலாளருக்கு எதிராக மலாக்கா, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
டத்தோ அந்தஸ்தைக் கொண்ட ரொஸ்லி ஹசான் என்ற அந்த முன்னாள் அரசியல் செயலாளர், மலாக்கா, தாமான் பொகோக் மாங்காவில் உள்ள தமது மனைவிக்குச் சொந்தமான பங்களா வீட்டைச் சீரமைப்பதற்காக லட்சம் பெற்றது உட்பட 4 லட்சத்து 8 ஆயிரத்து 736 வெள்ளியைக் கையூட்டாக பெற்றதாக அவருக்கு எதிராக மொத்தம் 12 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ரொஸ்லி ஹசான் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்

இராணுவ உயர்மட்ட ஊழல் தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடும் அதிருப்தி: மற்ற துறைகளிலும் ஊழல் பரவியிருக்கூடும் என கவலைத் தெரிவித்தார்

போதைப் பொருள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் Namewee

பங்கோரில் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவான் பெண் மரணம்

ரேக்ஸ் டானின் குடும்பத்தினருக்கு எதிராக மிரட்டல் விடுப்பதை நிறுத்துங்கள் - சைஃபுடின் எச்சரிக்கை


