லஞ்சம் பெற்றதாக மலாக்கா மாநில முன்னாள் முதலமைச்சர் இட்ரீஸ் ஹரூன்னின் முன்னாள் அரசியல் செயலாளருக்கு எதிராக மலாக்கா, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
டத்தோ அந்தஸ்தைக் கொண்ட ரொஸ்லி ஹசான் என்ற அந்த முன்னாள் அரசியல் செயலாளர், மலாக்கா, தாமான் பொகோக் மாங்காவில் உள்ள தமது மனைவிக்குச் சொந்தமான பங்களா வீட்டைச் சீரமைப்பதற்காக லட்சம் பெற்றது உட்பட 4 லட்சத்து 8 ஆயிரத்து 736 வெள்ளியைக் கையூட்டாக பெற்றதாக அவருக்கு எதிராக மொத்தம் 12 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ரொஸ்லி ஹசான் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


