May 26, 2026
Thisaigal NewsYouTube
விரைவு பேருந்தை கைவிட்டு தப்பியோடிய ஓட்டுநர்
தற்போதைய செய்திகள்

விரைவு பேருந்தை கைவிட்டு தப்பியோடிய ஓட்டுநர்

Share:

கோப்பெங், நவ. 29-


போதைப்பொருள் உட்கொள்ளும் வர்த்தக வாகனங்களுக்கு எதிராக அமலாக்க அதிகாரிகள் தற்போது ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு வரும் வேளையில், விரைவு பேருந்து ஒன்றை அமலாக்க அதிகாரிகள் தடுத்து நிறுத்திய போது, அதன் ஓட்டுநர், அந்த பேருந்தை கைவிட்டு, அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார்.

இச்சம்பவம் நேற்று இரவு, பேரா, கோப்பெங், கிராமப்புற உருமாற்று மையமான ஆர்.டி.சி.யில் நிகழ்ந்தது. அந்த பேருந்து ஓட்டுநர் போதைப்பொருள் உட்கொண்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

பேருந்தில் 11 பயணிகள் அமர்ந்திருப்பதையும் பொருட்படுத்தாமல் அவர், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அந்த பேருந்து, சாலாக் சவுத்தில் உள்ள டிபிஎஸ் பேருந்து நிலையத்திலிருந்து பினாங்கு நிபோங் திபாலை நோக்கி சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்தது.

அந்த விரைவு பேருந்தின் ஓட்டுநர் இருக்கையை அமலாக்க அதிகாரிகள் சோதனையிட்ட போது போதைப்பொருள் பயன்பாட்டிற்கான உபகரணங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மேல் விசாரணைக்கு ஏதுவாக இவ்விவகாரம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு மன்றத்தின் பேரா மாநில இயக்குநர் முகமட் ஸவாவி ஜக்கரியா தெரிவித்தார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு