Aug 1, 2026
Thisaigal NewsYouTube
பிரிக்பீல்ட்ஸ் Q Sentral கட்டடத்தின் 33-ஆவது மாடியிலிருந்து விழுந்த நபர் உயிர் தப்பினார்
தற்போதைய செய்திகள்

பிரிக்பீல்ட்ஸ் Q Sentral கட்டடத்தின் 33-ஆவது மாடியிலிருந்து விழுந்த நபர் உயிர் தப்பினார்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.01-

கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் பகுதியிலுள்ள Q Sentral கட்டடத்தின் 33-ஆவது மாடியிலிருந்து விழுந்த 32 வயது ஆடவர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

இது குறித்து Brickfields மாவட்ட போலீஸ் தலைவர் Hoo Chang Hook கூறுகையில், தீயணைப்பு வீரர்கள் கயிறுகள் உள்ளிட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி அவரை பாதுகாப்பாக மீட்க முயன்ற போதும், அவர் KL Sentral-ஐ இணைக்கும் கட்டிடப் பகுதியில் விழுந்ததாகத் தெரிவித்துள்ளார்.

ஆட்சேர்ப்பு நிறுவனத்தில் பணியாற்றும் அந்த நபருக்கு கை, கால் மற்றும் இடது விலா எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளதுடன், கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் பணிச்சுமை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related News