Apr 16, 2026
Thisaigal NewsYouTube
புதிய ஆட்சேர்ப்பு முறை குறித்த வதந்தி: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கண்டனம்
தற்போதைய செய்திகள்

புதிய ஆட்சேர்ப்பு முறை குறித்த வதந்தி: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கண்டனம்

Share:

பெஸ்டினெட் நிறுவனம் உருவாக்கிய புதிய வெளிநாட்டுத் தொழிலாளர் ஆட்சேர்ப்பு முறையை மலேசியா அமல்படுத்தவுள்ளதாக ‘புளூம்பெர்க்’ வெளியிட்ட செய்தியை மனிதவளத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

விஸ்மா பெர்னாமாவில் நடைபெற்ற கலந்துரையாடலில் பேசிய அவர், "அமைச்சரவையில் முன்மொழிவைச் சமர்ப்பிக்க வேண்டிய எனக்கே தெரியாத விவரங்கள் அந்த அறிக்கையில் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது," என்றார்.

ஒரு தொழிலாளருக்கு 1,000 அமெரிக்க டாலர் கட்டணம் விதிக்கப்படும் என்ற கூற்றை நிராகரித்த அவர், அரசாங்கம் ‘புலம்பெயர்வுச் செலவை பூஜ்ஜியமாக்கும்’ இலக்கை நோக்கிச் செயல்படுவதைச் சுட்டிக்காட்டினார்.

இவ்விவகாரத்துடன் தொடர்புடைய அமைச்சு உறுதிப்படுத்தப்படாத இத்தகைய துல்லியமற்ற தகவல்களை வெளியிடுவது பொறுப்பற்ற செயல் என்று அவர் சாடினார். மேலும், 2011 முதல் இயங்கி வரும் பெஸ்டினெட்டின் ‘FWCMS’ அமைப்பு, சைபர் தாக்குதல்களை முறியடித்து ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் உள்ளிட்ட சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளதையும் டத்தோஸ்ரீ ரமணன் நினைவு கூர்ந்தார்.

Related News