ஒற்றுமை அரசாங்கத்திற்கு இதுநாள் வரை தாம் வழங்கி வந்த ஆதரவை மூவார் எம்.பி.யும், மூடா கட்சியின் தலைவருமான சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் மீட்டுக்கொண்டதைத் தொடர்ந்து இன்று சிறப்பு மக்களவைக்கூட்டத் தொடரில் அந்த இளம் எம்.பி. எதிர்க்கட்சி வரிசையில் அமர்த்தப்பட்டுள்ளார்.
தம்முடைய நாடாளுமன்ற இருக்கையை எதிர்க்கட்சி வரிசைக்கு மாற்றும்படி சையிட் சாடிக் அ னுப்பி வைத்துள்ள கடிதத்தை அடிப்படையாக கொண்டு அவருக்கான இட அமர்வு, எதிர்க்கட்சி வரிசைக்கு மாற்றப்படுவதாக மக்களை சபா நாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு தாம் வழங்கி வந்த ஆதரவை மீட்டுக்கொள்வதாக சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


