Mar 21, 2026
Thisaigal NewsYouTube
கார் தீப்பிடித்து எரிந்ததில் ஆடவர் உயிர் தப்பினார்
தற்போதைய செய்திகள்

கார் தீப்பிடித்து எரிந்ததில் ஆடவர் உயிர் தப்பினார்

Share:

சிலாங்கூர், சிம்பாங் லிமா, சுங்கை நிபாஹ் சாலையில் ஆடவர் ஒருவர் ஓட்டிச் சென்ற SUV ரக கார் சட்டென்று தீப்பிடித்து எரிந்தது.

இன்று மாலை 4.02 மணியளவில் கிடைக்கப் பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சிலாங்கூர், மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறையின் செயல்பாட்டு பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.

BMW X5 ரக காரில் பயணித்த 46 வயது ஆடவர் காரின் 'டாஷ்போர்டு' - டில் இருந்து புகை வருவதை கவனித்து, காரை சாலையோரத்தில் நிறுத்தியுள்ளார்.

அவ்வாடவர் இறங்கிய வேகத்தில் கார் தீப்பிடித்து எரிந்ததாகவும் எந்தவொரு காயமின்றி அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பியதாகவும் அஹ்மத் முக்லிஸ் கூறினார்.

விபத்தில் கார் 95 சதவீதம் தீயில் எரிந்து சாம்பலாகியதாக அஹ்மத் முக்லிஸ் மேலும் விவரித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து