Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அடுத்த ஆண்டிற்குள் 123 குடிநுழைவுச் சாவடிகளில் தானியங்கி வாயில்கள் அமைக்கப்படும் - உள்துறை அமைச்சர் தகவல்!
தற்போதைய செய்திகள்

அடுத்த ஆண்டிற்குள் 123 குடிநுழைவுச் சாவடிகளில் தானியங்கி வாயில்கள் அமைக்கப்படும் - உள்துறை அமைச்சர் தகவல்!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.01-

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில், நாட்டிலுள்ள குடிநுழைவுச் சாவடிகளில் தானியங்கி வாயில்கள் நிறுவும் பணி தொடங்கும் என உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

எல்லைக் கட்டுப்பாட்டை வலுப்படுத்துவது, கடத்தல் நடவடிக்கைகளைத் தடுப்பது மற்றும் கள்ளக் குடியேறிகளைக் கட்டுப்படுத்துவது உள்ளிட பல பிரச்சினைகளுக்குத் தீர்வாக இந்த தானியங்கி முறை செயல்படும் என்றும் சைஃபுடின் உறுதியளித்துள்ளார்.

எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அமைப்பின் மேற்பார்வையின் கீழ் தொடங்கும் இப்பணிகளின் மூலம், நாடெங்கிலும் சுமார் 123 சாவடிகளில் 635 தானியங்கி வாயில்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்நிலையில், தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதில் ஒருமைப்பாடு மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ள சைஃபுடின், உள்துறை அமைச்சு அவற்றில் எந்தவித சமரசமும் செய்யாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்