May 18, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவிற்கு விதிக்கப்பட்ட வரி விவகாரம் மீதான பேச்சுவார்த்தை
தற்போதைய செய்திகள்

மலேசியாவிற்கு விதிக்கப்பட்ட வரி விவகாரம் மீதான பேச்சுவார்த்தை

Share:

கோலாலம்பூர், ஜூன்.19-

மலேசியாவிற்கு விதிக்கப்பட்டுள்ள வரி தொடர்பில் அமெரிக்காவுடனான மலேசியாவின் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

மலேசியாவிற்கு அமெரிக்கா விதித்துள்ள 24 விழுக்காடு வரியைக் குறைப்பது தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தையின் மையக் கருத்தாக உள்ளது.

அமெரிக்காவிற்கு மலேசியா ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்களுக்குக் கூடுதல் வரி வகிதத்தை விதித்துள்ளது. இந்நிலையில் இந்த வரி விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் தெங்கு ஸாஃப்ருல் அஸிஸ் மற்றும் இரண்டாவது நிதி அமைச்சர் அமிர் ஹம்ஸா அஸிஸான் தற்போது வாஷிங்டனில் உள்ளனர்.

அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹொவர்ட் லட்நிக்குடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை மிகச் சுமூகமாகவும் அதே வேளையில் ஆக்கப்பூர்வமான விளைவுகளுக்கான அறிகுறிகளுடன் நடைபெற்றதாக தமக்கு தகவல் அனுப்பபட்டுள்ளதாக டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்தார்.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை