சக மலேசியர்களைக் குறிவைத்து இணைய மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 30 மலேசியர்கள், இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தான் மாநிலம் பொந்தியானாக் நகரில் உள்ள விடுதி ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் தைவான் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
22 ஆண்கள், 8 பெண்கள் அடங்கிய இந்தக் குழுவானது, விடுதியில் உள்ள 14 அறைகளை பயன்படுத்தி மோசடி நடவடிக்கைகளை மேற்கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 31 பேரும் விசாரணைக்காக குடிநுழைவு தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் விசா காலத்தைத் தாண்டி தங்கியிருந்ததும், மற்றவர்கள் தங்கும் அனுமதி விதிகளை மீறியதும் தெரியவந்துள்ளது.
இவர்கள் பல்வேறு சட்டவிரோத வழிகள் மூலம் இந்தோனேசியாவுக்குள் நுழைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை தொடர்ந்து நடைபெறும் நிலையில், மலேசிய அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








