Sep 11, 2026
Thisaigal NewsYouTube
மவுண்ட் ஜாசார் மலையிலிருந்து தவறி விழுந்து ஜெர்மன் சுற்றுலாப் பயணி உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

மவுண்ட் ஜாசார் மலையிலிருந்து தவறி விழுந்து ஜெர்மன் சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

Share:

தனது மனைவியுடன் மவுண்ட் ஜாசார் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 58 வயது ஜெர்மன் சுற்றுலாப் பயணியான ஜோர்க் ஹபெல்புஸ்க் மலையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

இன்று காலை 11.30 மணியளவில், 57 வயதான தனது மனைவி மரினா டேனேவுடன் அவர் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

இந்நிலையில் மதியம் 12.04 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து கேமரன் மலை தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 16 வீரர்கள் மீட்புப் பணிக்கு அனுப்பப்பட்டனர்.

மலை உச்சிக்கு அருகே உள்ள செங்குத்தான பாதையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பயணித்த மீட்புப் படையினர், அங்கிருந்த பள்ளத்தாக்கில் அவர் விழுந்து கிடந்ததைக் கண்டறிந்தனர்.

அப்போது அவர் சுயநினைவிழந்து காணப்பட்ட நிலையில், மருத்துவ அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.

Related News

கிள்ளானில் நகை விநியோக ஊழியரிடம் 1.5 லட்சம் மதிப்புள்ள 70 தங்கக் கட்டிகள் கொள்ளை

கிள்ளானில் நகை விநியோக ஊழியரிடம் 1.5 லட்சம் மதிப்புள்ள 70 தங்கக் கட்டிகள் கொள்ளை

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க புதுடெல்லி புறப்பட்டார் பிரதமர் அன்வார்: கேரளா மற்றும் மாலத்தீவில் முக்கியத் தலைவர்களைச் சந்திக்கிறார்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க புதுடெல்லி புறப்பட்டார் பிரதமர் அன்வார்: கேரளா மற்றும் மாலத்தீவில் முக்கியத் தலைவர்களைச் சந்திக்கிறார்

ஈப்போ செல்லும் நெடுஞ்சாலையில் மண் சரிவு — 15 கி.மீ. தூரத்துக்கு கடும் போக்குவரத்து நெரிசல்

ஈப்போ செல்லும் நெடுஞ்சாலையில் மண் சரிவு — 15 கி.மீ. தூரத்துக்கு கடும் போக்குவரத்து நெரிசல்

மலேசியர்களைக் குறிவைத்து இணைய மோசடி – இந்தோனேசியாவில் 30 மலேசியர்கள் கைது

மலேசியர்களைக் குறிவைத்து இணைய மோசடி – இந்தோனேசியாவில் 30 மலேசியர்கள் கைது

லெங்கோங் பள்ளியில் 159 பேருக்கு உடல்நலக்குறைவு -  உணவு மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டதாக டத்தோ சிவநேசன் தகவல்

லெங்கோங் பள்ளியில் 159 பேருக்கு உடல்நலக்குறைவு - உணவு மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டதாக டத்தோ சிவநேசன் தகவல்

திடீர் வெள்ளப் பெருக்கு: அனைத்து விலங்குகளும் பாதுகாப்பாக உள்ளதாக ஸூ நெகாரா அறிவிப்பு

திடீர் வெள்ளப் பெருக்கு: அனைத்து விலங்குகளும் பாதுகாப்பாக உள்ளதாக ஸூ நெகாரா அறிவிப்பு